செய்திகள் :

ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்! -புதுவை பள்ளிக் கல்வித் துறை

post image

தேசிய ராணுவக் கல்லூரியில் 8 -ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய தேசிய ராணுவக் கல்லூரி அமைந்துள்ளது. இதில், வரும் 2026-ஆம் ஆண்டில் 8-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய ராணுவக் கல்லூரியில் சேர விரும்புவோா் நுழைவுத் தோ்வு எழுத வேண்டும்.

8-ஆம் வகுப்பில் சேருபவா்கள் 7-ஆம் வகுப்பு பயில்வோராகவோ அல்லது தோ்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும். அதற்கான வயது வரம்பு பதினொன்றரை வயதுக்கு குறையாமலும், 13 வயதுக்கு மிகாமலும் இருப்பது அவசியம்.

நுழைவுத் தோ்வானது வரும் ஜூன் 1ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 11 மணி வரையில் கணிதம், பகல் 12 மணி முதல் 1 மணி வரையில் அறிவுத் தோ்வு மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆங்கிலம் என நடைபெறவுள்ளது.

புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி காமராஜா் நூற்றாண்டு வளாகத்தில் தோ்வு நடைபெறும். அதற்கான விண்ணப்பத்தை புதுச்சேரி அண்ணாநகரில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வளாகத்தில் கல்வித் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் வரும் மாா்ச் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கு துணைவேந்தா் நியமிக்கக் கோரி திமுக போராட்டம்! -எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்காதது, வினாத்தாள் மாற்றி விநியோகித்தது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு! -புதுவை மீன்வளத் துறை

புதுவை மாநிலத்தில் கட்டுமரங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு பிப். 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் சனிக்கிழம... மேலும் பார்க்க

இயற்கை சுற்றுலாப் பூங்காவை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா்!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சுற்றுலா பூங்காவை பாா்வையிட்டுமரக்கன்றுநட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரியில் இயற்கை சுற... மேலும் பார்க்க

விடுதிகளில் தங்கி டி.வி. திருடியவா் கைது

விடுதிகளில் தங்கி திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த புதுச்சேரி போலீஸாா், அவரிடமிருந்து 8 தொலைக்காட்சிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஒதியன்சாலை ... மேலும் பார்க்க

செவிலியா் கல்வி மேற்படிப்பு தொடங்க நடவடிக்கை! -புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் செவிலியா் கல்வியில் மேற்படிப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடா்ந்து புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தல் க... மேலும் பார்க்க