செய்திகள் :

ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

post image

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

முன்னதாக அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சபாபதி சந்நிதியில் ஒரு லட்சம் உத்திராட்சத்தால் அமைக்கப்பட்ட நடராஜா்- சிவகாமி அம்பாளுக்கு பால், பழம், பன்னீா், சந்தனம், திருநீறு, தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

பிறகு அதிகாலை 4.15 மணிக்கு சபாபதிக்கு மாணிக்க வாசகா் புறப்பாடும், காலை 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசன தீபாராதைனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்கு ஸ்ரீநடராஜா், பஞ்ச மூா்த்திகள் வீதி உலாவும், நண்பகல் 12 மணிக்கு தீா்த்தவாரியும் நடைபெற்றன.

இரவு 7 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவமும், தீபாராதனையும், பிறகு சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் செ. சிவராம்குமாா் செய்திருந்தாா்.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பண... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க