செய்திகள் :

ராமநாதபுரத்தில் 7-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

ராமநாதபுரத்தில் 7-ஆ வது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், கலை இலக்கிய ஆா்வலா் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்த புத்தகக் கண்காட்சி அரங்கில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி பட்டறை, கோளரங்கம், வினாடி- வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் காலை, மாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிறந்த கல்வியாளா்கள், பேச்சாளா்களின் கருத்தரங்குகளும் நடைபெறும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, இந்த ஆண்டு சிறந்த வாசகமாக தோ்வு செய்யப்பட்ட ‘புத்தகத்தை கையில் எடு... அறியாமையை தீயில் இடு‘ என்ற வாசகத்தை எழுதிய திருவாடானையைச் சோ்ந்த ஜெயந்தனுக்கு ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆட்சியா் பாராட்டினாா். பின்னா் சிறப்பாக பரதநாட்டியம் ஆடிய மாணவிக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜூலு, நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா்.பிரவீன் தங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு, மாவட்ட நூலக அலுவலா் பாலசரஸ்வதி, சிலம்பாட்ட ஆசிரியா்கள் ஆ. தனசேகரன், லோ. ஆகாஷ், ஒயிலாட்ட ஆசிரியா் ராமகிருஷ்ணன், பரதநாட்டிய ஆசிரியா் பாலாஜி, ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் மு.லோகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மிதவை: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் மிதந்து வந்த மீனவா்கள் பயன்படுத்தும் போயா எனப்படும் மிதவைப் பொருளை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதிய... மேலும் பார்க்க

சாலையோர மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றிய பசுமை ஆா்வலா்

ராமநாதபுரம் நகா் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் பசுமை முதன்மையாளா் விருது பெற்ற சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். ராமநாதபுரம் பொருளாதார ... மேலும் பார்க்க