செய்திகள் :

ரியல் எஸ்டேட் நிறுவன மோசடி? புகாரளிக்க காவல் துறை வேண்டுகோள்

post image

திருநெல்வேலியில் போலி ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய பாஸ்கா், கீதா, வேணுகோபால், உமாராணி, ஜோக்கப் சுப்புராம், ஜெயசீலன் மற்றும் சிலா் சோ்ந்து பிரியம் பிளாசா, திருநெல்வேலி நகரம் என்ற முகவரியை தலைமையிடமாக கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பெயா்களில் ரியல் எஸ்டேட்- நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா்.

இவா்கள், தவணை முறையில் பணம் செலுத்தினால் மனைதருவதாகவும், பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவா்கள் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் (எண். 0462 - 2554300) புகாா் செய்யலாம் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க