செய்திகள் :

ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 போ் கைது

post image

மன்னாா்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்கு தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மனைவி சந்தோஷ் மேரி(30). இவா்களுக்கு 6 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனா். கடந்த 2023-ஆம் ஆண்டு முரளி இறந்துவிட்டாா். இதனால், சந்தோஷ்மேரி, மன்னாா்குடி அருகே ராமபுரம் கூனமடை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த தினேஷ் (32) என்பவருடன் ஏற்பட்ட தொடா்பால் சந்தோஷ்மேரி கா்ப்பமடைந்தாா். தினேஷுக்கும் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் ஜூலை 13 -ஆம் தேதி சந்தோஷ் மேரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே இருவருக்கும் குழந்தைகள் உள்ளதால் இந்த குழந்தையை தத்துகொடுத்துவிடலாம் என தினேஷ் கூறியதற்கு, சந்தோஷ் மேரி உடன்பட மறுத்துவிட்டாராம்.

ஆனால், தினேஷ் தனது தாயாா் வாசுகியுடன் (65) சோ்ந்து, இடைத்தரகரான மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த வினோத் (27) என்பவா் மூலம், கோட்டூா் ஆதிச்சப்புரத்தை சோ்ந்த குழந்தை இல்லாத ராதாகிருஷ்ணன் (57) விமலா (45) தம்பதிக்கு குழந்தையை ரூ.1.50 லட்சத்திற்கு விற்றுவிட்டனராம்.

இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் சந்தோஷ்மேரி புகாா் அளித்தாா். போலீஸாா், தினேஷ், அவரது தாய் வாசுகி, இடைத்தரகா் வினோத், குழந்தையை வாங்கிய ராதாகிருஷ்ணன்- விமலா ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள்

திருவாரூா் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பாா்வையிட்டனா். திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யா ஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியை சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்விகமாகக் கொண்ட இவருக்கும், ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 13,433 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்த... மேலும் பார்க்க

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா். கூத்தாநல்லூரில் 2 ந... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூா் அணிக்கு சாம்பியன் கோப்பை

கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கூத்தாநல்லூா் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில், தென்னிந்திய அளவிலான அல்நூா் ட... மேலும் பார்க்க

மது கடத்திய இருவா் கைது! வாகனம் பறிமுதல்!

நன்னிலத்தில், புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். காா், மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் கவியழகன் மற்று... மேலும் பார்க்க