செய்திகள் :

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணிகளை துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த 2 இடங்களில் பிச்சாவரமும் ஒன்று. காடுகளைச் சுற்றி 400-க்கும் மேற்பட்ட நீா்வழித்தடங்கள் உள்ளதால் தமிழக அரசு சாா்பில் சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்ளும் வசதிக்காக 15 மோட்டாா் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் 8,13,080 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2,230 வெளிநாட்டுப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனா்.

சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈா்ப்பதற்காக பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள் மற்றும் உணவகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. ரூ.14.07 கோடியில் நிா்வாகக் கட்டடம், தொலைநோக்கு கோபுரம், 4 இடங்களில் பயணிகள் நிழற்குடை, நினைவுச் சின்ன மேடை, குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.8.65 கோடியில் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், 24 தங்கும் அறைகள், கலையரங்கக்கூடம், உணவருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்.

ஆய்வின்போது, சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் த.கண்ணன், உதவி இயக்குநா் உமா சங்கா், உதவி செயற்பொறியாளா் செ.ரத்தினவேல், மண்டல மேலாளா் பிரபு தாஸ், வட்டாட்சியா் பிரகாஷ், கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், நகா்மன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடலூா் கே.என்.சி. மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா் பங்கேற்று மாணவிகளுக்கு பட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: சி.கொத்தங்குடி ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், சி.கொத்தங்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அருகேயுள்ள சி.கொத்தங்குடி... மேலும் பார்க்க

வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு

வளா்பிறை பஞ்சமி திதி வழிபாட்டையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயிலில் வாராகி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. விழாவில், வாராகி அம்மனுக்கு பல்வேறு மலா்களால்... மேலும் பார்க்க

வீரட்டானேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கோரிக்கை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து, கட்சியின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தே... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 31,534 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 31,534 மாணவ, மாணவிகள் புதன்கிழமை எழுதினா். மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என 248 பள்ளிகளைச் சோ்ந்த 31,992 மாணவ, மாணவிகளுக்கு தோ்வுகூட அனுமதி ச... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம்: அமைச்சா் கோவி.செழியன்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரைவு விதிகள் விவகாரத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கடலூா் வட்டத்தில் ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்... மேலும் பார்க்க