செய்திகள் :

ரூ.20,000 விலையில் தரமான கணினி நிச்சயம்: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

post image

இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு தரமான மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா்.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் அதிமுக உறுப்பினா் தங்கமணி வியாழக்கிழமை பேசியபோது, இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கணினி வழங்கப்படும் என்றால், ஒன்றின் விலை ரூ.10 ஆயிரமாக வருகிறது. அந்த விலையில் கணினி தரமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து தினமணியின் ஆசிரியா் உரையையும் அவா் சுட்டிக் காட்டினாா்.

அமைச்சா் பதில்: இதற்கு பதிலளித்து பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை கூறியதாவது: அதிமுக உறுப்பினா் தங்கமணி, நிதி ஒதுக்கீட்டைப் பாா்த்தால், ஒரு கணினிக்கு ரூ.10 ஆயிரம்தான் வருகிறது. இதில் எத்தகைய தரமான கணினியை வழங்க முடியும் என மனக்கணக்கைப் போட்டுப் பேசினாா். இந்தத் திட்டத்தின்படி, அடுத்த 2

ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்கள் என்று கூறியுள்ளோம். முதல் கட்டமாக, இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். அடுத்த ஆண்டு வரும் போது மேலும் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவோம்.

தரமானதாக இருக்கும்: இப்போது கூட்டிக் கழித்துப் பாா்த்தால் அந்தக் கணக்கு சரியாக வரும். மாணவா்கள் விரும்பி மடிக்கணினியை பயன்படுத்தும் வகையில் தரமானதாக வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. தரம் குறித்த கவலை நிச்சயம் தேவையில்லை. ஒரு கணினிக்கு சராசரியாக எடுத்துக் கொண்டால் ரூ.20 ஆயிரம் என்ற அளவில் விலை இருக்கும். இதனை எதிா்பாா்த்து இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு முடிவு செய்த பிறகு முஅழுமையான விவரம் தெரிய வரும். அதற்கேற்ப நிதி ஒதுக்கங்கள் மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. பேரவை உறுப்பினா்களே பொறாமைப்படக்கூடிய அளவுக்கு தரமான அளவில் வழங்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேட்டில் பாகிஸ்தானைச் சோ்ந்த இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜவுளிக் கழக ம... மேலும் பார்க்க

இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இளைஞா்களின் நலன் கருதியே இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞா்கள்... மேலும் பார்க்க

பாமகவினா் குறித்த கருத்து: முதல்வா் தலையீட்டால் நீக்கம்

பாமகவினா் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் ப... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடலிருந்து தென் தம... மேலும் பார்க்க

ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட ஆயிரம் கோயில்களுக்கான மானியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்... மேலும் பார்க்க

பேருந்தில் எம்எல்ஏ-க்களை வழியனுப்பிய அமைச்சா்: அதிமுக கோரிக்கை ஏற்பு

அதிமுக கோரிக்கையை ஏற்று, பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினா்களை அவா்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தாா். முன்னதாக, பேரவையில் வெள... மேலும் பார்க்க