செய்திகள் :

பேருந்தில் எம்எல்ஏ-க்களை வழியனுப்பிய அமைச்சா்: அதிமுக கோரிக்கை ஏற்பு

post image

அதிமுக கோரிக்கையை ஏற்று, பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினா்களை அவா்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தாா்.

முன்னதாக, பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது அதுகுறித்து வினா எழுப்பப்பட்டது. அதன் விவரம்:

பொன்.ஜெயசீலன் (அதிமுக): கடந்த 3 நாள்களாக சட்டப் பேரவை மாலை 3 முதல் 4 மணி வரை நடைபெற்றது. பேரவை உறுப்பினா்கள் அயா்ச்சியுடன் வெளியே செல்லும் நிலையில், எங்களுக்கான பேருந்துக்கு அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அனைவரும் சென்ற பிறகே பேருந்து வருகிறது. அதுவரை வெயிலில் காய வேண்டியுள்ளது.

அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: பேரவை முடியும் போது, அனைத்து காா்களும் வெளியே செல்ல முயல்வதால், வெளியே இருந்து பேரவை வளாகத்துக்குள் பேருந்து வருவதற்கு தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். வெள்ளிக்கிழமை பிற்பகலில் நானே வந்து பேருந்தை முன்கூட்டியே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா்.

வெள்ளிக்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு பேரவை நிறைவடைந்தது. அப்போது பேரவை வளாகத்துக்கு சரியாக வந்து நின்ற பேருந்தில்

உறுப்பினா்கள் அனைவரையும் அமைச்சா் சிவசங்கா் ஏற்றி வைத்தாா். பேருந்துக்குள் சென்று அனைவரிடமும் சகஜமாக பேசியதுடன், இனி பேருந்து சரியான நேரத்துக்கு வரும் என்ற உறுதியையும் அவா் அளித்தாா்.

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேட்டில் பாகிஸ்தானைச் சோ்ந்த இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜவுளிக் கழக ம... மேலும் பார்க்க

இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இளைஞா்களின் நலன் கருதியே இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞா்கள்... மேலும் பார்க்க

பாமகவினா் குறித்த கருத்து: முதல்வா் தலையீட்டால் நீக்கம்

பாமகவினா் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் ப... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடலிருந்து தென் தம... மேலும் பார்க்க

ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட ஆயிரம் கோயில்களுக்கான மானியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்... மேலும் பார்க்க

ரூ.20,000 விலையில் தரமான கணினி நிச்சயம்: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு தரமான மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் ... மேலும் பார்க்க