செய்திகள் :

இது மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி: நவீன் பட்நாயக்

post image

தொகுதி மறுசீரமைப்பு என்பது மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நவீன் பட்நாயக் பேசுகையில்,

மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம். மக்கள்தொகையை நாம் கட்டுப்படுத்திருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.

மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை குறைப்பது மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி. இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்திய புறகே மத்திய அரசு கொது மறுசீரமைப்பை நடத்த வேண்டும்.

மேலும், 2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளை ஒடிசா இழக்கும். ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதளம் போராடும் என பட்நாயக் கூறினார்.

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று (மார்ச் 21) ... மேலும் பார்க்க