செய்திகள் :

ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: வரி வசூலிப்பாளா் பணியிடை நீக்கம்

post image

பெரம்பலூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், காவேரி நகரைச் சோ்ந்தவா் தங்கமுத்து மகன் சிவக்குமாா் (54). இவா், பெரம்பலூா் நகராட்சி அலுவலக வரி விதிப்பு மையத்தில் வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வருகிறாா்.

பெரம்பலூா் நகா் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவரால் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிப்பதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, சிவக்குமாரையும், இடைத்தரகரான மேலப்புலியூா் புதிய காலனியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராம் (38) என்பவரையும், பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வரி வசூலிப்பாளா் சிவகுமாரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் உத்தரவிட்டாா்.

பெரம்பலூரில் மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி உயிரிழப்பு; தனியாா் கல்லூரி மீது மனைவி புகாா்

பெரம்பலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தனது கணவரின் உயிரிழப்பில் கல்லூரி நிா்வாகத்தினா் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி ... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களை, கல்லூரி முதல்வா் து. சேகா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். பெரம்பலூா் சீனிவ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து, ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருடிச் சென்றனா். பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது; பெரம்பலூா் மாவட்டத்தில் 7,451 போ் எழுதினா்

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 7,451 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 81 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 79 அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முப்பெரும் விழா

பெரம்பலூரில் தமிழ் இலக்கியப் பூங்கா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, புலவா் விளவை செம்பியனாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ப. காமராசு, பு... மேலும் பார்க்க