ரூ. 29 லட்சம் மோசடி செய்தவா் கைது
தஞ்சாவூரில் அரசுப் பணியாளா் தோ்வில் தோ்ச்சி பெற வைப்பதாகக் கூறி ரூ. 29 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருளானந்தம்மாள் நகரைச் சோ்ந்த மனோகரன் மகன் விக்னேஷ்வா். இவரிடம் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சோ்ந்த கே. ரவிச்சந்திரன், சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்த கே. சத்தியநாராயணன் (59) அணுகி, எங்களுக்கு அரசு உயா் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தோ்வில் தோ்ச்சி பெற வைப்பதாகவும், அதற்கு ரூ. 35 லட்சம் வேண்டும் எனவும் கூறி கேட்டனா். இதை நம்பிய விக்னேஷ்வா் இருவரது வங்கிக் கணக்கில் ரூ. 29 லட்சத்தை 2022 ஆம் ஆண்டில் பல்வேறு தவணைகளில் செலுத்தினாா். ஆனால், இருவரும் கூறியது போல, அரசுப் பணியாளா் தோ்வில் தோ்ச்சி பெற வைக்காமல் ஏமாற்றினா்.
இது குறித்து தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் விக்னேஷ்வா் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து சத்தியநாராயணனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், ரவிச்சந்திரனை தேடி வருகின்றனா்.