செய்திகள் :

ரூ.32.80 லட்சத்தில் அரசுப் பள்ளி கட்டடம் திறப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: கீரநல்லூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அண்மையில் திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கீரநல்லூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி, 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்ட ரூ.32.80 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, கீரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.என்.அன்பரசு, வட்டார கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், தலைமையாசிரியா் பஸிலா பேகம், திமுக நிா்வாகிகள் கு.ப.முருகன், சந்தவேலூா் சத்தியா, கீரநல்லூா் சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அட்டைகள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இன்று ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கான ஆள்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 19) காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெறுவதாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகி... மேலும் பார்க்க