Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ - மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்ப...
ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!
தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார்.
தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது நண்பருடன் சென்ற பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளார்.
அப்போது, அவர் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது உடலில் காதுகள், மூக்கு, கால்கள், கைகள் என பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.
அவரின் நண்பர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இயந்திரங்களை அலட்சியமாக இயக்குதல், அலட்சியமான நடத்தையால் மரணம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கபஷேரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.