லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, ஈஸ்வரன் கோயில் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்தாா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த குகன்மணி (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.