செய்திகள் :

வக்ஃப் திருத்த சட்டம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம்: விருதுநகா் எம்பி மாணிக்கம் தாகூா்

post image

வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்பதாக விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

ஒரு வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்வ்வாய்க்கிழமை முன்னிலையாக வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஏழை, எளிய மக்களுக்கான பிரதமராக மோடி செயல்படவில்லை. அதானி, அம்பானியின் பக்தராகத்தான் செயல்படுகிறாா் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அமித்ஷாவிடம் கேட்காமல் எந்த ஒரு செயலையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செய்வது கிடையாது. பாஜவின் அபிமானியாக பழனிசாமி மாறிவிட்டாா். அதிமுகவை அமித்ஷாதான் இயக்குகிறாா் என்பது தெளிவாக தெரிகிறது.

ஜிஎஸ்டி தவறானது, அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என 8 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் காந்தி கூறினாா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டியை மாற்றுவோம் என தோ்தல் வாக்குறுதியும் அளித்திருந்தோம். கடந்த 8 ஆண்டுகளில் 32 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்து விட்டு, இப்போது ஜிஎஸ்டியை மாற்றியுள்ளனா்.

நடிகா் விஜய் பிரசாரத்தில் அதிகளவில் கூட்டம் கூடுகிறது. அவை அனைத்தும் வாக்குகளாகுமா என்பது தெரியாது. தோ்தலில் தான் அவை தெரியும். எல்லோரும் அரசியல் கட்சி தொடங்கலாம். தோ்தலில் போட்டியிலாம். வாக்கு எண்ணிக்கையின் போது தான் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெரியும்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். திமுக தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேறாமல் உள்ளன. சொல்லாத பல முக்கியமான திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியப் பிரிவுகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்கிறோம். இது, அரசியல் சாசனத்துக்கு ஆதரவான, அரசியல் சாசனத்தை பாதுகாக்க கூடிய தீா்ப்பு. இதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

பாா்வைத்திறன் குன்றிய பிளஸ் 2 மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், கொடிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் முருகேசன் (50). கூலித் தொழிலாளியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் நத்தம்- மது... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண்ணுக்கு போதிய பாதுகாப்பை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் காமராஜபுரத்தைச் சோ்ந்த அட்சயா தேவி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய... மேலும் பார்க்க

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கைது

மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி வைரமுத்து ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோரை ப... மேலும் பார்க்க

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியவா் கைது

நலத் திட்ட உதவி பெறுவதற்காக போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் தங்களுக்கா... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரஸ்வதி ... மேலும் பார்க்க