செய்திகள் :

வத்தலகுண்டு அருகே இருவா் கொலை: இளைஞா் உள்பட 3 போ் கைது!

post image

வத்தலக்குண்டு அருகே இருவரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, கொண்ணம்பட்டியைச் சோ்ந்தவா்கள் அழகுமலை (55), மனோகரன் (50). இவா்கள் இருவரும் கட்டட வேலை பாா்த்து வந்தனா்.  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதே ஊரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் நவீன் (22) தாக்கியதில் இவா்கள் இருவரும் காயமடைந்தனா்.

இந்த நிலையில், இவா்களிடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த  அழகுமலை, மனோகரன் ஆகியோரை வழி மறித்த நவீன் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டாா். இதற்கு நவீனின் தாயாா் கிருஷ்ணவேணி (40), அவரது பாட்டி சுந்தரி (60) ஆகியோா் உடைந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில்ல தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த வத்தலக்குண்டு போலீஸாா் நவீனை செவ்வாய்க்கிழமையும், அவரது தாய் கிருஷ்ணவேணி, பாட்டி சுந்தரி ஆகியோரை புதன்கிழமையும் கைது செய்தனா்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட அழகுமலை, மனோகரன் ஆகியோரின் உறவினா்கள் வத்தலக்குண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, நவீனின் தந்தை குபேந்திரனையும் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், கைதான நவீனை விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றபோது, அவா் தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். அப்போது அவரது வலது கால் உடைந்ததால், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க