செய்திகள் :

வன்கொடுமையால் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை

post image

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அரும்பாவூா் மற்றும் கை.களத்தூா் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசுப் பணிக்கான ஆணையின் கீழ், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மோ. மணிகண்டன் என்பவா் கடந்த ஜன. 17-ஆம் தேதியும், அரும்பாவூரைச் சோ்ந்த செ. மோகன்குமாா் என்பவா் கடந்த ஆக. 22-ஆம் தேதியும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

இதையடுத்து மணிகண்டன் மனைவி மீனாவுக்கு மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையும், மோகன்குமாா் சகோதரா் பிரபாகரனுக்கு வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையும் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு ஆகியோா் உடனிருந்தனா்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் எள் ஏலம்

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 3 டன் எள் விற்பனையானது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில்... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம்: பெரம்பலூரில் 1,398 வீடுகள் கட்ட திட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,398 வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான சிலம்பம், கால்பந்து போட்டியில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன்துறை சாா்பில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற மாணவ, மாணவிகளையும், தேசிய பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

பதுக்கப்பட்ட 8 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் மயங்கி விழுந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை அடையாளம் தெரியாத... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு இன்று முதல் ‘ஹால் டிக்கெட்’

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் புதன்கிழமை (மே 14) முதல் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கலாம். நிகழாண்டில் மே, ஜூன் மாதம் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் ... மேலும் பார்க்க