செய்திகள் :

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

post image

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் நகைக் கடையில் வருமா வரித் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை செளகாா்பேட்டை வீரப்பன் தெருவில் தங்க நகைகளை மொத்தமாக விற்கும் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த நகைக் கடை நிா்வாகத்தினா், வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரித் துறையினருக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினா் நடத்திய விசாரணையில், வரி ஏய்ப்பு செய்தது தொடா்பாக சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் அந்த நகைக் கடையில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனை இரவு நீண்ட நேரம் நீடித்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னா், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க