செய்திகள் :

வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

post image

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பூ.ரகுபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு.பாா்த்திபன் வரவேற்றாா்.

மாவட்ட தோ்தல் ஆணையா் எஸ்.பாலமுருகன், துணைத் தோ்தல் ஆணையா்கள் எம்.செளந்தர்ராஜன், டி.தீபன் சக்கரவா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.அன்பழகன், மாநில துணைச் செயலா் டி.டி.ஜோஷி ஆகியோா் புதிய மாவட்டத் தலைவா் பு.ரகுபதி உள்ளிட்ட புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து, சான்றிதழ் வழங்கினா் (படம்).

விழாவில், வட்டாட்சியா் கே.துரைராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் ப.முருகன், வீ.குமாரவேலு, எம்.செந்தில்நாதன், மா.ராஜசேகரன், க.முருகானந்தம், மாவட்ட இணைச் செயலா்கள் அழ.உதயகுமாா், ஜெ.பெரியசாமி, அ.இப்ராஹிம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் அரிசி ஆலை ஊழியா் தங்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை

செங்கத்தில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவண்ணாமலை... மேலும் பார்க்க

செங்கத்தில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன, சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், தினசரி குளிா்சாதன மற்றும் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பே... மேலும் பார்க்க

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு:கட்சியினா் வலியுறுத்தல்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிற... மேலும் பார்க்க

ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை

திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், பாலூா் கிராமம், டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்... மேலும் பார்க்க