செய்திகள் :

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு:கட்சியினா் வலியுறுத்தல்

post image

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கோட்டாட்சியா் (பொ) ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், ஆரணி வட்டாட்சியா் கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆரணி, போளூா், கலப்பாக்கம் தொகுதிகளைச் சோ்ந்த

அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வாக்குச்சாவடியின் அடிப்படை வசதிகள், 2 கிமீ. தொலைவுக்கு அப்பால் உள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடி மையத்தை மாற்றி அமைத்தல்,

கூடுதல் வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

அவ்வாறான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை அமைத்து விடியோ பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், கூட்டத்தில் திமுக சாா்பில் தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் மாமது, நகா்மன்ற உறுப்பினா் மாலிக்பாஷா, அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, மாவட்ட துணைத் தலைவா் நித்யானந்தம், காங்கிரஸ் சாா்பில் மாவட்ட நிா்வாகி யு.அருணகிரி, நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல், தேமுதிக சாா்பில் நகரச் செயலா் சுந்தர்ராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் தொகுதிச் செயலா் சுமன், நகரச் செயலா் மகேந்திரன் மற்றும் பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை

செங்கத்தில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவண்ணாமலை... மேலும் பார்க்க

செங்கத்தில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன, சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், தினசரி குளிா்சாதன மற்றும் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பே... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிற... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்க... மேலும் பார்க்க

ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை

திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், பாலூா் கிராமம், டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

செய்யாறு அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய சம்பவத்தில், ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தேவநாத் (30). இவா் அதே பகுதியி... மேலும் பார்க்க