செய்திகள் :

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

post image

பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பல வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தேஜஸ்வி காட்டிய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக அவருக்கு அனுப்பபட்ட தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிப்பதாக அவர் கூறினார்.

விடுபட்ட பல வாக்காளர்களைப் பற்றி தேர்தல் ஆணையம் எங்களுக்குப் பதில் கூற வேண்டும். ஒரே வீட்டைச் சேர்ந்த 50 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற பல முரண்பாடுகள் உள்ளன. "நாங்கள் அதையே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, நீதிமன்றத்தில் எங்கள் தரப்பை முன்வைப்போம்," என்று அவர் கூறினார்.

தேஜஸ்வி யாதவ் மீது பாட்னாவில் உள்ள திகா காவல் நிலையத்தில் இரண்டு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) வைத்திருப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்குரைஞர் ராஜீவ் ரஞ்சன் சமர்ப்பித்துள்ளார், அதற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்டதற்காகத் தேஜஸ்வி யாதவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாகச் சாடினார். பொய்களையும், குழப்பத்தையும் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு நிறுவனம், ஆனால் அவர்கள் இதையும் விட்டுவைக்கவில்லை. தேஜஸ்வி யாதவ் இவ்வளவு அற்பமான பொய்களைப் பேசி குழப்பத்தைப் பரப்பினால், அந்த நிறுவனம் நிச்சயமாக சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்கும் என்று கிரிராஜ் சிங் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேஜஸ்வி யாதவ் தனது EPIC (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) எண் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய சில நாள்களுக்குப் பிறகு அமைச்சர் கிரிராஜின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லிய... மேலும் பார்க்க

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகிய... மேலும் பார்க்க

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாதத்துக்கும் ம... மேலும் பார்க்க

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வாழ்க்கைப் பயணம் என்பது, மாணவர் தலைவராகத் தொடங்கி, அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு, லட்சியங்கள், சர்ச்சைகள், அரசியல் சாதனைகளின் பட்டியலுடன் நீள்... மேலும் பார்க்க

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 20 விடுதிகள் சேதம்..12 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்ப... மேலும் பார்க்க