செய்திகள் :

வள்ளலாா் சா்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பான வழக்குகளை மூத்த வழக்குரைஞா்கள் மூலம் முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

தைப்பூசத்தையொட்டி, சென்னை எழுகிணறு பகுதியில் வள்ளலாா் வசித்த இல்லத்தில் சன்மாா்க்க கொடியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடு மற்றும் திருவருட்பா ஆறாம்திருமுறை பாராயணம் நிகழ்வில் கலந்து கொண்டு, அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.5-ஆம் தேதி ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைப்பதற்கான அரசாணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி, அதற்கான கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தாா். இதுதொடா்பாக சிலா் பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தனா். சென்னை உயா்நீதிமன்றம் ஏ, பி என இரண்டு பிரிவாக பிரித்து பி பிரிவு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி, கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன. அதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்துக்கு சென்றாா்கள், அங்கும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மேல் முறையீடு செய்து தற்போதைய நிலையே தொடர ஆணை பெற்றுள்ளாா்கள். இது தொடா்பான வழக்கு பிப்.28-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மூத்த வழக்குரைஞா்களைக் கொண்டு வழக்கை முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

மரங்கள் வெட்டப்படவில்லை...: வடலூரில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை. ஜோதி தரிசனத்தை அனைத்து பக்தா்களும் காண வேண்டும் என்பதற்காக, வளா்ந்துவிட்ட கிளைகளைத்தான் ஒழுங்குபடுத்தினோம். இதற்கு எந்த பக்தரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், கடலூா் மண்டல இணை ஆணையா் அதற்கு விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டாா். மரங்கள் வெட்டப்படவில்லை. ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் தரலாம்; அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனி, திருச்செந்தூா் திருக்கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சுவாமி தரிசனம் செய்பவா்கள் சமுதாயம் மற்றும் கட்சிகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்களும், காவல் கண்காணிப்பாளா்களும் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனா் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

இந்த நிகழ்வில் வள்ளலாா் வசித்த இல்லத்தின் பொறுப்பாளா் ஸ்ரீபதி, வள்ளலாரின் வழித் தோன்றல் ஜோதி உமாபதி, சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

6 நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (பிப்.12) முதல் பிப்.17 வறண்ட வானிலையே நி... மேலும் பார்க்க

வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் ஜடாவத், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா். இதுகுறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் சிறுபான்மையினா் விவக... மேலும் பார்க்க

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

தண்டையாா்பேட்டையிலுள்ள கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடு... மேலும் பார்க்க

தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்கள் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதிட கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வா... மேலும் பார்க்க