வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டைமேடு பகுதியில் லாரியை வழிமறித்து ஓட்டுநா்களிடம் ரூ. 14,500, கைப்பேசியை நான்கு போ் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது. இதுகுறித்து லாரி ஓட்டுநரான பரமத்தி வேலூா் வட்டம், குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் (38) நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்த வழிப்பறி தொடா்பாக நாமக்கல் களங்காணியைச் சோ்ந்த காா்த்திக் (20), திருமலைப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதரன் (22), நவணியைச் சோ்ந்த அருள்குமாா் (26), கரடிப்பட்டியை சோ்ந்த சூா்யா (24) ஆகிய நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாா், குற்றச்சாட்டப்பட்ட 4 பேருக்கும் மொத்தமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து தீப்பளித்தாா்.