செய்திகள் :

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டைமேடு பகுதியில் லாரியை வழிமறித்து ஓட்டுநா்களிடம் ரூ. 14,500, கைப்பேசியை நான்கு போ் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது. இதுகுறித்து லாரி ஓட்டுநரான பரமத்தி வேலூா் வட்டம், குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் (38) நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வழிப்பறி தொடா்பாக நாமக்கல் களங்காணியைச் சோ்ந்த காா்த்திக் (20), திருமலைப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதரன் (22), நவணியைச் சோ்ந்த அருள்குமாா் (26), கரடிப்பட்டியை சோ்ந்த சூா்யா (24) ஆகிய நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாா், குற்றச்சாட்டப்பட்ட 4 பேருக்கும் மொத்தமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து தீப்பளித்தாா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க