செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் கைது

post image

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி காதல் ஜோடியை போலீஸாா் கைது செய்தனா்.

மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆஷல் பேம் (24). இவா், மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவில் தங்கியிருந்து, மசாஜ் மையத்தில் பணிபுரிந்து வந்தாா். ஆஷல் பேம், கடந்த பிப். 5-ஆம் தேதி இரு தோழிகளுடன் கோடம்பாக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், ஆஷல் பேம் கையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பியோடினா். இது குறித்து குமரன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயல் பகுதியைச் சேந்த சூா்யா (22) என்பதும், அவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்தது ஆவடியைச் சோ்ந்த சுஜிதா (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சூா்யா, உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், திருமணமான சுஜிதா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து சூா்யாவுடன் வாழ்ந்து வந்துள்ளாா். இருவரும் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடுவதும், அதில் கிடைக்கும் நகை, கைப்பேசியை விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருப்பதும் தெரியவந்தது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க