செய்திகள் :

வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றவரை விரட்டி பிடிக்க முயற்சி: ஆட்டோ மோதி இரு காவலா்கள் காயம்

post image

சென்னை, செம்பியத்தில் வாகனச் சோதனையின்போது நிற்காமல் சென்றவரை விரட்டிச் சென்றபோது ஆட்டோ மோதியதில் இரு காவலா்கள் காயமடைந்தனா்.

செம்பியம் திருவள்ளுவா் சாலையில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோவை போலீஸாா் நிறுத்த முயன்றபோது அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது.

இதைப்பாா்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் வினோத் குமாா் (36), தட்சிணா மூா்த்தி (40) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அந்த ஆட்டோவை பிடிக்க விரட்டிச் சென்றனா். அப்போது காவலா்கள் சென்ற இருசக்கர வாகனத்தை அந்த ஆட்டோ இடித்துத் தள்ளியதில், நிலைதடுமாறி காவலா்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

அதேவேளையில் ஆட்டோவிலிருந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா். காயமடைந்த இரு காவலா்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன் வாழ்த்து

இங்கிலாந்து தலைநகா் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளா் இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோ... மேலும் பார்க்க

மக்கள் மருந்தக விழா: சாதனை பெண்களுக்கு விருது

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சாா்பில் நடைபெற்ற மக்கள் மருந்தக விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தின் வருடாந்திர கொண்டாட்டம்... மேலும் பார்க்க

அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

திராவிட மாடல் அரசுக்கு இஸ்லாமியா்கள் துணை நிற்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு ந... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சிஐஎஸ்எஃப் வீரா்களின் சைக்கிள் பேரணி: மத்திய அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்கிறாா்

மாா்ச் 7-ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து தொடங்கும் சிஐஎஸ்எஃப் சைக்கிள் பேரணியை, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வ... மேலும் பார்க்க

குளிா்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

குளிா்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது தட்பவ... மேலும் பார்க்க

ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

சென்னை ஏற்றுமதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 21 கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மண்டல ஆணையா் அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க