செய்திகள் :

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

post image

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திய 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் மது போதையில் அந்த மதுக்கடையின் முன்பே தூங்கி விட்டாா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கரிமேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும் வாகனம் மோதி உயிரிழந்தவா் யாா், அந்தப் பகுதியைச் சோ்ந்தவரா அல்லது வெளியூரைச் சோ்ந்தவரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டுச் தப்பிச் சென்ற வாகனத்தையும் தேடி வருகின்றனா்.

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து: ஒருவர் பலி

மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை நள்ளிரவு பலியானார்.மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் அருகே நக்கீரர் அலங்கார நினைவு வளைவு அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்... மேலும் பார்க்க

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க