செய்திகள் :

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

post image

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

மதுரை புதுநத்தம் சாலையில் ஆத்திகுளம் பகுதியில் ஆயுதப் படை மைதானம், ஆயுதப்படை காவலா் குடியிருப்பு, சிறப்புக் காவல் படை முகாம் மற்றும் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இதில் சிறப்புக் காவல்படை முகாம் வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சிறப்புக் காவல் படை வளாகத்தில் புதன்கிழமை பிற்பகலில் காவலா் குடியிருப்புகள் நடுவே இருந்த தென்னை மரம் அந்த வழியாகச் சென்ற மின் கம்பியில் உரசியது. இதனால் அந்த மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மேலும் காற்றின் வேகத்தால் அருகில் உள்ள மரங்களுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதனிடையே இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் தீயில் எரிந்து கருகிய தென்னை மரம் அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இர... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க

பூக்களைப் பறிக்க முயன்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே குளத்தில் தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). வாகன ஓட்டு... மேலும் பார்க்க