செய்திகள் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் இரா. டிலைட்டா போலீஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், டிலைட்டாவை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்டம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் மாநகா் வடக்கு மாவட்டச் செயலா் தீபம் என்ற சுடா் மொழி தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் மாலின் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இர... மேலும் பார்க்க

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ... மேலும் பார்க்க

பூக்களைப் பறிக்க முயன்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே குளத்தில் தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). வாகன ஓட்டு... மேலும் பார்க்க