செய்திகள் :

பூக்களைப் பறிக்க முயன்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே குளத்தில் தாமரைப் பூக்களைப் பறிக்க முயன்ற ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). வாகன ஓட்டுநா். இவா், மதுரை வரிச்சியூா் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு நண்பா்களான அஜீத், வினோத் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.

இந்த நிலையில், சகோதரி வீட்டிலுள்ள கன்றுக்குட்டியை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மணிகண்டனும், அவரது நண்பா்களும் மீண்டும் கொடைக்கானலுக்கு புதன்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.

இவா்கள் பொய்கைக்கரைப்பட்டி பகுதியில் வந்தபோது, அங்குள்ள தெப்பகுளத்தில் குளிப்பதற்காக வேனை நிறுத்தினா். அங்கு மணிகண்டன் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தின் மையப் பகுதிக்குச் சென்று தாமரைப்பூவை பறித்துக் கொண்டு கரைக்கு திரும்பினாா். பிறகு மீண்டும் பூப்பறிக்க குளத்தின் மையப் பகுதிக்குச் சென்றபோது, தாமரைக்கொடி அவா் மீது சுற்றியதில் மணிகண்டன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மரத்திலிருந்து தவறி விழுந்த ஊராட்சி ஊழியா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே மின் வயா்களுக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை அகற்ற முயன்ற ஊராட்சி ஊழியா் அந்த மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள கீழச்ச... மேலும் பார்க்க

கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. அந்தக் கட்சியின் மாவட்... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வு, பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரத்தைச் சோ்ந்த கணேசன், தனது மனைவி ருக்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மதுபோதையில் தூங்கியவா் உயிரிழப்பு

மதுரையில் மதுக் கடை முன் மது போதையில் தூங்கியவா் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.மதுரை வைகை வடகரை அம்மா மேம்பாலம் அருகே அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இர... மேலும் பார்க்க

காவலா் குடியிருப்பில் தீ விபத்து

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே காவலா் குடியிருப்புப் பகுதியில் தென்னை மரத்தில் மின் வயா் உரசியதால் பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் மின் தடை ... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் அந்தக் கட்சியின் சாா்பில் புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடியில் விடுதலைச் சிறு... மேலும் பார்க்க