செய்திகள் :

வானம் கலைத் திருவிழா: 'சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம்'- பா.ரஞ்சித் பேசியது என்ன?

post image

2025ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தொடங்கியது.

இந்தக் கலைத்திருவிழாவில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பி.கே.ரோசி திரைப்படவிழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த திரைப்பட விழாவில் உலகளவில் விருதுகள் பெற்ற திரைப்படங்கள், தடை செய்யப்பட்ட ஒரு சில உலகத் திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்படும்.

வானம் கலைத் திருவிழா
வானம் கலைத் திருவிழா

அந்தவகையில் நேற்று( ஏப்ரல் 6) 'சந்தோஷ்' என்ற திரைப்படம் திரையிடப்பட இருந்தது. ஆனால் அந்தப் படத்தைத் திரையிட அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசியிருக்கும் பா.ரஞ்சித், "இந்தத் திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என்று போலீஸ் தரப்பில் இருந்து நோட்டிஸ் ஒட்டிச்சென்றிருக்கிறார்கள்.

படம் திரையிடக்கூடாது என்று பிரச்னை செய்திருக்கிறார்கள். பிரசாத் லேப்பின் உரிமத்தை நீக்கி விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள்.

இங்கு 'சந்தோஷ்' படத்தைத் திரையிட முடியவில்லை என்றால் என்ன? நாங்கள் வெளியில் திரையிடுவோம். அவர்கள் பிரச்னை செய்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு சக்தி நம்மிடம் இருக்கிறது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

கைது செய்தாலும் பரவாயில்லை. கொஞ்சநாள் சிறையில் இருப்போம். 10 நாட்கள் சிறையில் இருந்தாலும் புத்தகம் படிக்கலாம். அதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். கைதாவதற்குத் தயாராக இருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

'சந்தோஷ்' திரைப்படத்தை பிரிட்டிஷ் - இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கி இருந்தார். இத்திரைப்படம் ஆஸ்கர் உட்பட உலகின் பல்வேறு விருது விழாவிற்கு சென்று கவனம் ஈர்த்தது.

இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை என்பது உள்ளிட்ட பிரச்னைகள் இத்திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இந்தியாவில் திரையிடத் தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் இணைந்து கரோக்கே பாடி வைப் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில், நடிகர் அஜித்தின் வாலி படத்தில் வரும் ஓ சோனா பாடலை நண்பருடன... மேலும் பார்க்க

`பா.ரஞ்சித் சார் போலவே புச்சிபாபு சனாவும்..' - வியக்கும் ஆடை வடிமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்

புச்சிபாபு சனாவின் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் முதல் ஷாட் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் ராம்சரணின் தோற்றமும... மேலும் பார்க்க

`வெயில் படத்துல நான் அப்படி பண்ணிருக்கக்கூடாது' - மேடையில் மன்னிப்புக் கேட்ட இயக்குநர் வசந்தபாலன்

வானம் கலைத் திருவிழாவில் வசந்தபாலன் சினிமா குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். "வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாகச் சித்தரித்து இருப்பேன். அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்க... மேலும் பார்க்க

க.மு. க.பி விமர்சனம்: வாழ்வின் இரண்டு கட்டங்கள்; சோதனை முயற்சியா, சோதிக்கும் முயற்சியா?

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என முயற்சி செய்யும் அன்பு (விக்னேஷ் ரவி), அதற்கு உதவியாக வேலைக்குச் சென்றுகொண்டே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் மனைவி அனு (சரண்யா ரவிச்சந்திரன்) - இவர்கள் இருவர் வாழ்வ... மேலும் பார்க்க

Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ - மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்பஸ்தன் நடிகை சான்வே

ஜெய்பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் நடிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குடும்பஸ்தன்'. இந்த ஆண்டு வெளியான சிறந்த குடும்பப் படம் என... மேலும் பார்க்க