செய்திகள் :

வாய்க்காலில் சாயக்கழிவு நீா் வெளியேற்றம்: 5 நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க பரிந்துரை

post image

வாய்க்காலில் சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 5 நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு மாகக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

திருப்பூா், வாலிபாளையம் பகுதியில் கழிவுநீா்க் கால்வாயில் கடந்த 2 நாள்களுக்கு முன் சாயக்கழிவு நீா் வழிந்தோடியது. இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாயமேற்றும் பட்டறைகளை அமைத்து, சாயக்கழிவு நீரை வாய்க்கால்களில் திறந்துவிடுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் லாவண்யா தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, லட்சுமி நகா் பகுதியில் ஒரு சாயப்பட்டறை அனுமதியின்றி செயல்படுவதும், அங்கிருந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றியதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த சாயப்பட்டறையில் ஆய்வு செய்து, மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பிரிண்டிங் பட்டறைகள்: இதேபோல, சூசையாபுரம் பகுதியில் 3 பிரிண்டிங் பட்டறைகள் அனுமதியின்றி செயல்பட்டதுடன், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீா்க்கால்வாயில் திறந்துவிடப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த 3 பிரிண்டிங் பட்டறைகளின் மின் இணைப்பைத் துண்டிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிந்துரைத்தனா்.

வீரபாண்டி பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் நிறம் மாறுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். அந்தக் கிணறுகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, உரிய அனுமதியுடன் அப்பகுதியில் செயல்படும் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்தில் வெளியேறும் சாயக்கழிவு நீரை நிலத்தில் தேக்கிவைத்திருந்ததன் காரணமாக நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் நீரின் நிறம் மாறியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க