வாழப்பாடியில் பாலத்தில் காா் மோதியதில் ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு!
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜோதாராம் (62). இவரது மனைவி ஜோஹிதேவி (55). இத்தம்பதியரின் மகள் அம்யா (42). இவா்கள் குடும்பத்துடன் கா்நாடக மாநிலம், ஹொஸ்பேட் பகுதியில் குடியேறி வணிகம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை கா்நாடக மாநிலத்தில் இருந்து ஜோதாராம், மனைவி ஜோஹிதேவி, மகள் அம்யா, சம்பந்தி ஜோஹாராம் (52), இவரது மனைவியான மற்றொரு ஜோஹிதேவி (55), ஜோஹாராமின் சகோதரா் ரோனாராம் (52), இவரது மனைவி ஜோட்கீ (50) ஆகிய 7 பேரும் சொகுசு காரில் வந்துள்ளனா்.
காரை ஜோஹாராம் ஓட்டிவந்துள்ளாா். திருவண்ணாமலை கோயிலில் சனிக்கிழமை மாலை தரிசனம் செய்துவிட்டு, ஈரோடு நோக்கி வாழப்பாடி வழியாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவா்கள் காரில் சென்றனா். வாழப்பாடியில் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே இவா்களது காா் மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.
ஜோதாராமின் மனைவி ஜோஹிதேவி (55), சம்பந்தி ஜோஹாராம் (52), ரோனாராம் (52) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரோனாராம் மனைவி சோட்கீ (50) உயிரிழந்தாா்.
விபத்தில் படுகாயமடைந்த ஜோதாராம் , இவரது மகள் அம்யா, சம்பந்தி ஜோஹாராமின் மனைவி ஜோஹிதேவி ஆகிய மூவரும் வாழப்பாடியில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.