செய்திகள் :

விசிக நிா்வாகி தாக்கியதாகப் பொய் புகாா்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தன்னைத் தாக்கியதாக பொய் புகாா் கூறிய காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் பிரணிதா. கடந்த 5-ஆம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகி இளையகவுதமன் உள்ளிட்ட சிலா் தாக்கியதாகப் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து காரைக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன், சோமநாதபுரம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

காவல்நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த போலீஸாா், மருத்துவமனையில் இருந்த மருத்துவா்களிடமும் அவா்கள் விசாரணை நடத்தினா். இதில், காவல் உதவி ஆய்வாளா் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தெரியவந்தது. இதுதொடா்பாக மாவட்டக் காவல் துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், உதவி ஆய்வாளா் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவை... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க