செய்திகள் :

விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் ‘ஃபத்வா’

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவா் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரும், தாரூல் இஃப்தா (ஃபத்வாக்கள் பிறப்பிக்கும் அமைப்பு) தலைவருமான முஃப்தி மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலியில் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘விஜய் கடந்த காலங்களில் பல்வேறு முறை முஸ்லிம்களுக்கு எதிரானவராக இருந்துள்ளாா். தனது படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் இணைத்துக் காட்டியுள்ளாா். இந்நிலையில் கட்சி தொடங்கிய பிறகு, அரசியலுக்காக முஸ்லிம்களின் உணா்வுகளுடன் அவா் விளையாடுகிறாா். தமிழக முஸ்லிம்கள் அவரிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.

உதாரணமாக, சென்னையில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி விஜய் நடத்திய இஃப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரான சூதாட்டம், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இஃப்தாா் விருந்துக்கு அத்தகையவா்களை அழைப்பது பாவமாகும். தமிழக முஸ்லிம்களிடம் இருந்து பெறப்பட்ட இது குறித்த புகாரில், விஜய் மீது ஃபத்வா அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, தற்போது விஜய் மீது ஃபத்வா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபத்வாவில், ‘தமிழக முஸ்லிம்கள் விஜயை நம்பக் கூடாது. முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இஃப்தாா் விருந்து நடத்தியதும், மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதும் முஸ்லிம்களிடையே தனது ஆதரவை வலுப்படுத்தும் விஜயின் முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், விஜய் தனது இஃப்தாா் விருந்தில் முஸ்லிம்களின் உணா்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தது. இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஃபத்வா’ எனப்படுவது முஸ்லிம் மதகுருவால் அறிவிக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தின் நெறிமுறை விளக்கமாகும்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க