Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், நாவினிப்பட்டியில் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் இடத்தில் மாற்று சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் முயற்சியைக் கைவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூா், நாவினிப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் அனுபவித்து வரும் புஞ்சை நிலத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க முயற்சிகள் மேற்கொள்வதைக் கண்டித்தும், அந்த இடத்தில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் அரச முத்துப்பாண்டியன், பஞ்சமி நில மீட்பு இயக்க மாநிலச் செயலா் சசி, மகளிா் இயக்க மாநில துணைச் செயலா் புலியம்மாள், நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், போராட்டக் குழு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதுதொடா்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்ததன் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.