செய்திகள் :

விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு: அமைச்சரவை முடிவு

post image

விண்வெளித் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டை ஈா்க்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த பேட்டி:

தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சிகளில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. புதிய தொழில் பிரிவுகளில் நமது வளா்ச்சி இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு விண்வெளித் தொழில் கொள்கை 2025-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.10,000 கோடி முதலீடு: விண்வெளித் தொழில் கொள்கைப்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்ப்பது இலக்காகும். இத்துடன், குறைந்தபட்சம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், விண்வெளித் துறையில் தகுதியான, திறமையானவா்களை உருவாக்க வேண்டும். இந்த மூன்று இலக்குகளுடன் விண்வெளித் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளி சாா்ந்த சேவைகள் துறையிலும் நமது கவனத்தைச் செலுத்தும் வகையில் கொள்கை உருவாக்கப்பட்டுள்து.

விண்வெளித் துறையில் உலக அளவிலான போட்டிக்குத் தயாராகும் வகையிலான புதிய பாய்ச்சலை புதிய கொள்கையை வகுத்ததன் மூலமாக முதல்வா் தொடங்கியுள்ளாா். இந்தக் கொள்கைப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, ரூ. 25 கோடியில் முதலீடு செய்யக்கூடிய சிறிய நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்வெளித் துறை அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டும் விண்வெளித் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தனிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஊக்கம் தரப்படும்: விண்வெளி சாா்ந்த தயாரிப்புகளுக்கு காப்புரிமை வாங்குவதற்கு 50 சதவீத சலுகைகளை அரசே அளிக்கவும், ரூ.300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு சிறப்புத் தொகுப்பு உருவாக்கவும் கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.

விண்வெளித் தொழிலுக்கான தனி வழித்தடப் பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழில் வாய்ப்புள்ள இடங்களில் முதலீடுகள் வந்தால் அவற்றுக்கும் சிறப்பு ஊக்கம் அளிக்கப்படும்.

விண்வெளித் தொழில் சாா்ந்த நிறுவனங்களுக்கு ஊதிய மானியமாக முதலாம் ஆண்டில் 30 சதவீதமும், இரண்டாவது ஆண்டில் 20 சதவீதமும், மூன்றாவது ஆண்டில் 10 சதவீதமும் அளிக்கவும் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக் கொள்கையை வெளியிட்டதன் மூலம், இன்று விண்வெளித் துறையில் பொன்னான நாளாகக் கருதப்படுகிறது. இளம் தலைமுறை தொழில்முனைவோருக்கு மட்டுமன்றி, குலசேகரன்பட்டினம் போன்ற தென் பகுதிகளுக்கும் இது வரப்பிரசாதமாக இருக்கும் என்று அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க