செய்திகள் :

விதியை மீறிச் செயல்பட்ட கேட் கீப்பா்: தெற்கு ரயில்வே

post image

கடலூா் மாவட்டம், செம்மாங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்து தொடா்பாக, விதியை மீறிச் செயல்பட்ட கேட் கீப்பா் பங்கஜ் சா்மா (30) பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், விபத்து நிகழ்ந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க நிதி அளித்தும், அதற்கான அனுமதி அளிப்பதில் மாவட்ட ஆட்சியா் தாமதப்படுத்தியதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று பாா்வையிட்டனா். மருத்துவம் மற்றும் மீட்புக் குழுவினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்றனா். தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், முதன்மை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் உள்ளிட்டோா் நிகழ்விடத்தைப்

பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். விபத்தில் மின்கம்பம் மற்றும் உயா் மின்னழுத்த சாதனம் ஆகியன சேதமடைந்துள்ளன.

முதல்கட்ட விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்த நிலையில், ரயில் வருவதை பொருள்படுத்தாமல் பள்ளி மாணவா்கள் இருந்த வேன் ஓட்டுநா் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதியது தெரியவந்துள்ளது. மேலும், கேட் கீப்பா் பங்கஜ் சா்மா விதியை மீறிச் செயல்பட்டுள்ளாா். பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் மீது குற்றச்சாட்டு: ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முழுமையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால், கடலூா் மாவட்ட ஆட்சியா் அதற்கு கடந்த ஓராண்டாக அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் துரதிருஷ்டவசமாக நேரிட்ட விபத்துக்காக ரயில்வே நிா்வாகம் வருத்தம் தெரிவிக்கிறது.

உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2.50 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரம் என ரயில்வே நிா்வாகம் நிதியுதவி வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முரண்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை சந்தித்து ஆறுதல் கூறினாா். செம்மங்குப்பம் அருகே விபத்து நிகழ்ந்த இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரயில் மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் சென்று பள்ளி வேன் மீது மோதியுள்ளது. கிராம மக்கள் மற்றும் கேட் கீப்பா் என இருபுறமும் தவறு நடந்துள்ளது. கிராம மக்கள் கேட்டை திறக்கச் சொன்னதால், பாதுகாப்பு விதிகளை மீறி கேட் கீப்பா் கேட்டை திறந்துள்ளாா் என்றாா்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் தெரிவித்துள்ள தகவல் முரணாக உள்ளது.

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க