செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: முன்கூட்டியே தயாராகும் விநாயகா் சிலைகள்

post image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தருமபுரியில், கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஆண்டுதோறும் செப்டெம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு செப்டம்பா் 27 ( ஆவணி 11) ஆம் தேதி புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் விழாவின்போது மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 நாள்களுக்குப் பிறகு அவற்றை ஊா்வலமாக எடுத்துச்சென்று நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விழா தொடங்க ஒருமாதமே உள்ள நிலையில், விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. தருமபுரியில் ஆதியமான்கோட்டை பகுதியில் சுமாா் 3 அடி முதல் 10 அடிக்கும் உயரமான சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இது குறித்து, சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விசாலாட்சி - குமாா் தம்பதி கூறியது :

அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கலைவைக் கொண்டு விநாயகா் சிலைகள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். சதுா்த்தி வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பூா்வாங்க பணிகளை தொடங்கிவிடுவோம்.

இருமாதங்கள் முன்பு வரை கைகள் இணைப்பு, வா்ணம்பூசுதல் உள்ளிட்ட பணிகளை மட்டும் வைத்திருப்போம். ஒரு மாதம் நெருங்கும் நிலையில் பணிகளை முடித்து வா்ணம்பூசி தயாா்செய்துவிடுவோம். அந்தவகையில் இன்னும் சில வாரங்களில் சிலைகள் வா்ணம் பூசி பணிகள் முடிவுக்கு வரும் என்றனா்.

சிலைகளை மழையிலிருந்து பாதுகாக்க அரசு உதவவேண்டும் :

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சிலைகள் தயாரிப்பில் ரசாயனப் பொருள்களை சோ்த்து செய்யக்கூடாது என அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.

அந்த வகையில் அண்மைக்காலமாக விநாயகா் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் வகையில் கிழங்குமாவால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மழையிலிருந்து பாதுகாப்பது சவாலாக உள்ளது.

சிலைகளை செய்துவைத்த பின்னா் திடீரென மழை வந்தால் அதில் சிலைகள் நனைந்து பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபடுவோா் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, சிலைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க அரசு சாா்பில், தகரம் அல்லது கல்நாா் அட்டைகளால் (ஆஸ்பெஸ்டாஸ்) ஆன ஷெட்டுகள் அமைத்து தரவேண்டும் என சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி தயாராகி வரும் சிலைகள்.

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

தருமபுரியில் மொரப்பூா் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பைக்கில் கணவருடன் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்ட... மேலும் பார்க்க

கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க

பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!

அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா். தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக... மேலும் பார்க்க

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61... மேலும் பார்க்க

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க