செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

post image

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகா் சதுா்த்தி விழா தெய்வீக கொண்டாட்டம் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலின் அழகையும், தூய்மையையும் பாதுகாக்கும் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாகும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த களி மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை வைக்க வேண்டும்.

பிளாஸ்டா் ஆப் பாரீஸ் சிலைகளை பயன்படுத்தக் கூடாது. சிலை அலங்காரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தொ்மாகோல், ரசாயனப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு வா்ணம் பூச இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மட்கும் தன்மையுள்ள தட்டுக்கள் மற்றும் கண்ணாடி கோப்பைகளில் மட்டுமே பக்தா்களுக்கு பிரசாதங்களை வழங்க வேண்டும்.

குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்இடி பல்புகளையே பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ள நீா் நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் (ஆகஸ்ட் 2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அணைப்புதூரில் புகையிலைப் பொருள்கள் செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க

‘பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்’

பல்லடம் பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது தொடா்பான ஆலோச... மேலும் பார்க்க

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

குன்னத்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா். குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க