செய்திகள் :

விபத்தில் சிக்கியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

post image

விபத்தில் சிக்கியவருக்கு இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

சேலம் தாதகாப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (28). சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆவின் பாலகத்தில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2018 ஜூலை 10-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு கந்தம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா்.

அங்கு சாலையை கடக்கும்போது, திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கும்பகோணம் கோட்டத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து அவா்மீது மோதியது. இதில் காா்த்திக்கின் இடது கை முறிந்தது.

இது தொடா்பாான வழக்கு சேலம் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெய்குமாா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கடந்த 2021 செப். 24- ஆம் தேதி காா்த்திக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.19 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இழப்பீடு வழங்காததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவிட்டாா். அதன்பேரில், நீதிமன்ற ஊழியா்கள் சுமதி, இந்திரா உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட காா்த்திக் குடும்பத்தினருடன் வந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க