செய்திகள் :

விமானத்தின் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள்: விமான போக்குவரத்து துறை விசாரணை

post image

சென்னை: துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்த விமானம் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

துபையிலிருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. விமானம் தரையிறங்கத் தயாரானபோது, விமானத்தின் மீது லேசா் ஒளி அடித்து விமானத்துக்கு வரக்கூடிய சிக்னலை திசை திருப்பும் செயலில் மா்ம நபா்கள் சிலா் ஈடுபட்டனா். இதனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, விமானி விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானத்தில் வட்டமடிக்கத் தொடங்கினாா்.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கிருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானி சாமா்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது குறித்து விமான போக்குவரத்து துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் மிகவும் சக்தி வாய்ந்த லேசா் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போலீஸாா் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க