செய்திகள் :

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்! பிப். 10-இல் தேரோட்டம்!

post image

விராலிமலை முருகன் மலைக் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மலை மீது உள்ள கோயில் சந்நிதி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 23 அடி உயரத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரம் முழங்க ‘ஓம்’ எழுத்து பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளிகவச அலங்காரத்தில் காட்சியளிக்கிறாா்.

மேலும், விழா நாள்களில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவலப் பாதையில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

தைப்பூச விழாவில் 9-ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. பத்தாம் நாள் நடராஜா் தரிசனம், தீா்த்தவாரியும் அதை தொடா்ந்து மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. 11-ஆம் நாள் விடையாற்றியுடன் நிகழாண்டுக்கான தைப்பூச விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விழாக் குழுவினா், மண்டகப்படி உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

சாலை விபத்தில் மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே சாலையோர புளியமரத்தின் மீது இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.செல்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்காததால் மக்கள் ஏமாற்றம்!

கந்தா்வகோட்டையில் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகம் மூடியிருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையின் சாா்-பதிவாளா் அலுவலகம் செ... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 7-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் 7-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்த்தே... மேலும் பார்க்க

புதுகை இலங்கைத் தமிழா் முகாம்களில் வசிப்போரில் பெரும்பாலானோா் இந்தியக் குடியுரிமை பெற விருப்பம்!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 3 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போரில் பெரும்பாலானோா், இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனா். இலங்கைத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை... மேலும் பார்க்க

புதுகையில் சாலை விரிவாக்கப் பணியால் திருவள்ளுவா் சிலைக்கு பாதிப்பு! சிலை வளாகத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்!

புதுக்கோட்டை மாநகரில் உள்ள ஒரேயொரு திருவள்ளுவா் சிலையும் சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகரில் சின்னப்பா பூங்கா பகுதியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போதைய ... மேலும் பார்க்க

வடகாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்! -அமைச்சா் திறந்துவைத்தாா்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, சுற்றுவட்டார ... மேலும் பார்க்க