செய்திகள் :

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

post image

விராலிமலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, விராலிமலை சுற்றுப்பகுதி தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளைக் குறிவைத்து தெருநாய்கள் சுற்றிவருகின்றன.

இவ்வாறாக சுற்றித்திரியும் நாய்கள் ஒருசில நேரங்களில் சிறுவர்கள், பாதசாரிகளை கடித்து விடுகின்றன, சில நாய்கள் வாகனத்தில் செல்வோரை விரட்டி செல்கினறன. நாய் கடித்துவிட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாய் கடித்து மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

இதன்காரணமாக, விராலிமலை ஊராட்சி மன்றம் மற்றும் கால்நடை துறை இணைந்து தெரு நாய்களுக்கு இன்று(செப். 9) ரேபீஸ் தடு்ப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக சிதம்பரம் கார்டன், முத்து நகர், தேரடி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 20 நாய்களை ஊராட்சி பணியாளர்கள் மூலம் வலை வைத்து பிடித்து, விராலிமலை கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வரும் நாள்களில் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று விராலிமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா திருட்டுக் கும்பல்! எச்சரிக்கை!!

Rabies vaccination work has begun in Viralimalai.

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க

சேலத்தில் குழந்தை கடத்தல்! கிடைத்த ஒரே துப்பு; நாமக்கல்லில் மீட்பு!

சேலம்: சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டது. சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழ... மேலும் பார்க்க

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா! - அண்ணாமலை

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி ... மேலும் பார்க்க