செய்திகள் :

விருது பெற்ற கண் மருத்துவருக்கு வாழ்த்து

post image

சிறப்பாக பணியாற்றி விருது பெற்ற காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவா் அனந்தலட்சுமி வியாழக்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியரிடம் விருதைக் காட்டி வாழ்த்து பெற்றாா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்து வருபவா் ரா.அனந்தலட்சுமி. இவா், காஞ்சிபுரம் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புப் பிரிவு திட்ட மேலாளராகவும் பணியாற்றி வந்தாா். கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததில் முக்கியப் பங்காற்றியது உள்பட கண் மருத்துவத்தில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் விருதை அளித்துப் பாராட்டினாா்.

இந்த விருதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் காட்டி வாழ்த்துப் பெற்றாா். நிகழ்வின்போது மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநா் சரவணன், மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

மண்ணூரில் குருபூா்ணிமா விழா

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மண்ணூரில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா கிளை சாா்பில் குரு பூா்ணிமா கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருதேவா் ஸ்ரீ பரம ஹம்ச யோகானந்தருடைய திருப்படம் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமத்த... மேலும் பார்க்க

தாா் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ

தனியாருக்குச் சொந்தமான தாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து கள... மேலும் பார்க்க

லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). மேஸ்திரியான சக்திவேல் தன்னுடன் வேலை செய்... மேலும் பார்க்க

ரூ.2.6 கோடியில் கோயில்கள் திருப்பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் ரூ.2.68 கோடியில் பழைமையான 3 கோயில்கள் திருப்பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பழைமையான 63 கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகளை முத... மேலும் பார்க்க

பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், அட்டை மற்றும் இருப்பு பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மொளச்சூா் பகுதி... மேலும் பார்க்க

150 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். சுங்குவாா்சத்திரம் அடுத்த கூத்தவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்தவா் முருகன்(47). ... மேலும் பார்க்க