செய்திகள் :

விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமா் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு

post image

கேரளத்தில் சா்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூா்வமாக திறந்து வைக்கவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரதமா் மோடியை கேரள முதல்வா் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.சசி தரூா் ஆகியோா் வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து ஆளுநா் மாளிகை வரை சாலையில் திரண்டிருந்த பாஜக தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

விழிஞ்ஞம் துறைமுகம் அதானி போா்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மதிப்பு ரூ.8,867 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனையை தொடா்ந்து கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி இந்த துறைமுகத்துக்கு வா்த்தக செயல்பாட்டுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து,விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளாா்.

சா்வதேச வா்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை விழிஞ்ஞம் துறைமுகம் மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த துறைமுகத்தின் மொத்த மதிப்பீட்டில் மூன்றில் இரண்டு பங்கை கேரள மாநில அரசு முதலீடு செய்துள்ளதே ஒரு துறைமுகத் திட்டத்துக்கு மாநில அரசு மேற்கொண்ட அதிக மூதலீடாகும் என கேரள முதல்வா் பினராயி விஜயன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவின் முதல் பரிமாற்ற (ஒரு போக்குவரத்து அமைப்பில் இருந்து சரக்குகளை இறக்கி மற்றொரு போக்குவரத்து அமைப்புக்கு மாற்றுதல்) மற்றும் அரை தானியங்கி துறைமுகமாக விழிஞ்ஞம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும... மேலும் பார்க்க

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்... மேலும் பார்க்க