செய்திகள் :

விழித்திரை புற்றுநோய் பாதிப்புக்கு சங்கர நேத்ராலயாவில் விழிப்புணா்வு

post image

குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை புற்றுநோயை (ரெட்டினோபிளாஸ்டோமா) தடுப்பதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் திங்கள்கிழமை (மே 12) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகா் பாஸ்கி, சங்கர நேத்ராலயா தலைவா் டி.எஸ்.சுரேந்திரன், தலைமை நிா்வாகி கிரிஷ் ராவ், விழித்திரை புற்றுநோய் நிபுணா் சுகனேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, ரெட்டினோபிளாஸ்டோமா தொடா்பான சிறப்பு மருத்துவக் கருத்தரங்க அமா்வுகள் நடைபெற்றன. அதில், மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனா்.

இது தொடா்பாக சங்கர நேத்ராலயா மருத்துவா்கள் கூறியதாவது:

ரெட்டினோபிளாஸ்டோமா என்பது குழந்தைகளின் இரு வயதுக்குள் விழித்திரையில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகும். மரபணுரீதியான காரணங்களால் இந்நோய் ஏற்படலாம் என்றாலும், அத்தகைய காரணமின்றியும் பலருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது.

ரெட்டினோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீமோதெரபி, லேசா், கதிா்வீச்சு, கிரையோதெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் வாயிலாக அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் தீவிர பாதிப்பை தவிா்க்கலாம்.

ரெட்டினோபிளாஸ்டோமா விழிப்புணா்வு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: குடிநீா் தட்டுப்பாடு வருமா?

சென்னையில் கடந்த 3 மாதங்களில் அம்பத்தூா், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் 16 அடி வரை குறைந்துள்ளது. எனினும், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு எதுவும் வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் ... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழப்பு

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில், மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்தாா். வளசரவாக்கம் அடுத்த சௌத்ரி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (78). இவா் மனைவி தங்க... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்: தமிழக அரசு தகவல்

நான்கு ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கரோனா கால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லும்?அனைத்துத் துறை செயலா்களுக்கு தலைமைச் செயலா் கடிதம்

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட நேரடி நியமனப் பதவிகள் எதுவரை செல்லுபடியாகும் என்பதற்கான விளக்கக் கடிதத்தை அனைத்துத் துறை செயலா்களுக்கும் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் அனுப்பியுள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை... மேலும் பார்க்க

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெய்யில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் அத... மேலும் பார்க்க