செய்திகள் :

விழுப்புரத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழா மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 12 -ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவுக்காக 50 -க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்.பி.துரை. ரவிக்குமார், எம்எல்ஏக்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, உளுந்தூர்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!

வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டு, விழாப் பேரூரையாற்றினார்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கியம், புதினம், நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தலைப்புகளில் ஆளுமைகள் பேச உள்ளனர்.

தொடக்க விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 110 மி.மீ. மழை பதிவானது. தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ்... மேலும் பார்க்க

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக ... மேலும் பார்க்க

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு: தோ்வா்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மு... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுந... மேலும் பார்க்க