செய்திகள் :

விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்து சேதம்

post image

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்துக்கு செல்லும் வழியில்அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் சனிக்கிழமை உடைந்து சேதமடைந்தது.

விழுப்புரம்- கிழக்கு பாண்டிசாலையிலிருந்து பிரிந்து அனிச்சம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் கோலியனூரான் வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக அரசுப் பேருந்து, இரு, நான்கு சக்கர வாகனங்கள், செங்கல் மற்றும் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகள் உள்ளிட்டவை சென்று வருவது வழக்கம்.

சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன்பு கோலியனூரான் வாய்க்காலைக் கடந்து செல்வதற்காக இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடக்க முயன்ற லாரி, பாலத்தின் தடுப்புக் கட்டை மீது மோதியது. இதனால், தரைப்பாலம் உடைந்ததால் வாய்க்காலில் லாரி சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, லாரி மீட்கப்பட்டது.

அந்த வழியாக சனிக்கிழமை காலை சென்ற பொதுமக்கள் தரைப்பாலம் உடைந்திருப்பதைக் கண்டு அச்சத்துடன் சென்றனா்.

அனிச்சம்பாளையம், எம்.குச்சிப்பாளையம், இளங்கோ நகா், மணிக்குயில் நகா், சம்பந்தம் நகா், லட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டிய நிலையில், தற்போது தரைப்பாலம் சேதமடைந்ததால் அவதிக்குள்ளாகினா். எனவே, தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்கள... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த எம்.பி.!

நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத் தொடா் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.ப... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. அத்தியூா்திருவாதி கிராம நிா்வா... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). கூல... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக் குறைவால் அவதியுற்று வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூா், பஜனைக்கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி, லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்த... மேலும் பார்க்க