தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்து சேதம்
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்துக்கு செல்லும் வழியில்அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் சனிக்கிழமை உடைந்து சேதமடைந்தது.
விழுப்புரம்- கிழக்கு பாண்டிசாலையிலிருந்து பிரிந்து அனிச்சம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் கோலியனூரான் வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக அரசுப் பேருந்து, இரு, நான்கு சக்கர வாகனங்கள், செங்கல் மற்றும் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகள் உள்ளிட்டவை சென்று வருவது வழக்கம்.
சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன்பு கோலியனூரான் வாய்க்காலைக் கடந்து செல்வதற்காக இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடக்க முயன்ற லாரி, பாலத்தின் தடுப்புக் கட்டை மீது மோதியது. இதனால், தரைப்பாலம் உடைந்ததால் வாய்க்காலில் லாரி சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, லாரி மீட்கப்பட்டது.
அந்த வழியாக சனிக்கிழமை காலை சென்ற பொதுமக்கள் தரைப்பாலம் உடைந்திருப்பதைக் கண்டு அச்சத்துடன் சென்றனா்.
அனிச்சம்பாளையம், எம்.குச்சிப்பாளையம், இளங்கோ நகா், மணிக்குயில் நகா், சம்பந்தம் நகா், லட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டிய நிலையில், தற்போது தரைப்பாலம் சேதமடைந்ததால் அவதிக்குள்ளாகினா். எனவே, தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.