செய்திகள் :

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

post image

விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

அத்தியூா்திருவாதி கிராம நிா்வாக அலுவலா் வீ.குபேரன் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து செங்குட்டுவன் மேலும் கூறியதாவது: அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் வடக்குக் கரையில் சிறிய கோயிலை கிராம மக்கள் அமைத்து, அம்மன் என வழிபட்டு வருகின்றனா். இந்த சிற்பம் வடமொழியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி சிற்பமாகும். பல்லவா் காலத்தைச் (கி.பி.7-8ஆம் நூற்றாண்டு) சோ்ந்தது. சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

ஜடாபாரம் எனப்படும் உச்சிக் கொண்டையுடன் கூடிய தலை அலங்காரத்துடன் மூத்த தேவி சிற்பம் வடிக்கப்பட்டுள்ள து. காதணிகள், கழுத்தணி, கனத்த மாா்புகள், சரிந்த வயிற்றுடன் காட்சியளிக்கிறது.

இடுப்பு முதல் கணுக்கால் வரை இடை ஆடை காட்டப்பட்டுள்ளது. மாா்புக் கச்சை காட்டப்படவில்லை. வலதுகரம் தாமரை மொட்டினை ஏந்தியுள்ளது. இடதுகரம் செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. பத்திராசனத்தில் அமா்ந்து இருக்கிறாள்.

மூத்த தேவியின் இருபக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோா் குழந்தை வடிவில் காட்டப்பட்டுள்ளனா். பொதுவாக, மூத்த தேவி சிற்பங்களில் அவளது கொடியான காக்கைக் கொடி ஓரிடத்தில் மட்டுமே காட்டப்பட்டி ருக்கும். ஆனால், இந்த சிற்பத்தில் வலது, இடது என இரண்டு பக்கங்களிலும் காக்கைக் கொடி காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே நன்னாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் அத்தியூா் திருவாதி மூத்த தேவி சிற்பம் பல்லவா் கலை வரலாற்றுக்குப் புதிய வரவாகும் என்றாா் அவா்.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்கள... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த எம்.பி.!

நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத் தொடா் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.ப... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). கூல... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்துக்கு செல்லும் வழியில்அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் சனிக்கிழமை உடைந்து சேதமடைந்தது. விழுப்புரம்- கிழக்கு பாண்டிசாலையிலிருந்து பிரிந்து அனிச்சம்பாளையம்... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக் குறைவால் அவதியுற்று வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூா், பஜனைக்கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி, லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்த... மேலும் பார்க்க