மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி, லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசங்கா்(42), கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்துக்கு பைக்கில் சென்றாா்.
திருவெண்ணெய்நல்லூா்-விழுப்புரம் சாலையில் ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாறு மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பா் லாரி பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிவசங்கா், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சிவசங்கரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.