செய்திகள் :

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் அருகே பைக்கில் சென்ற தொழிலாளி, லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசங்கா்(42), கூலித் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரத்துக்கு பைக்கில் சென்றாா்.

திருவெண்ணெய்நல்லூா்-விழுப்புரம் சாலையில் ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாறு மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பா் லாரி பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிவசங்கா், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சிவசங்கரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க வேண்டும்! - துரை.ரவிக்குமாா் எம்.பி.

இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வுக் கொள்கையை மதிய அரசு உருவாக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.விழுப்புரத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: திபெத்திலிருந்து அகதிகளாக வந்தவா்கள... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த எம்.பி.!

நாடாளுமன்ற குளிக்காலக் கூட்டத் தொடா் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு தரப்பினரையும் அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.ப... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே பல்லவா் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூா் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுமாா் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் காலத்து மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. அத்தியூா்திருவாதி கிராம நிா்வா... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், உலகலாம்பூண்டி, அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28). கூல... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்துக்கு செல்லும் வழியில்அமைந்துள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் சனிக்கிழமை உடைந்து சேதமடைந்தது. விழுப்புரம்- கிழக்கு பாண்டிசாலையிலிருந்து பிரிந்து அனிச்சம்பாளையம்... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக் குறைவால் அவதியுற்று வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூா், பஜனைக்கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க